மூத்த ஒலி/ஒளிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்

மூத்த ஒலி/ஒளிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்

இலங்கையின் மூத்த ஒலி/ஒளிபரப்பாளரும், சூரியன் எப்.எம் வானொலியின் முதலாவது முகாமையாளரும் முன்னாள் ஆலோசகருமான சி. நடராஜசிவம், நேற்று (24) புதன்கிழமை இரவு காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையே அவர் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல வானொலிகளில் மூத்த அறிவிப்பாளராகவும், பல்துறைக் கலைஞராகவும் சி.நடராஜசிவம் செயற்பட்டிருந்தார்.

மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். ஊடகத் துறைக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள இவரது மறைவுக்கு எமது இணையத்தளம் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகளை உரித்தாக்குகிறோம்!