ஐக்கிய தேசியக் கட்சி - அதன் முன்னாள் செயற்பாட்டாளர்கள் முக்கிய சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சி - அதன் முன்னாள் செயற்பாட்டாளர்கள் முக்கிய சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் முன்னாள் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னாளர் ஆளுநர்களான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, அசாத் சாலி, கீர்த்தி தென்னகோன் மற்றும் சட்டத்தரணி சிரால் லக்திலக்க போன்றவர்களே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னணி செயற்பாட்டாளர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அதன் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வருமாறு அரசங்காளம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.