பிழையான செய்திகளால் தவறாக வழிநடாத்தபட வேண்டாம்: அமானா வங்கி

 பிழையான செய்திகளால் தவறாக வழிநடாத்தபட வேண்டாம்: அமானா வங்கி

அமானா வங்கியானது அதன் வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் சமூகவலைத்தளங்களில் உலவும் பிழையான செய்திகள் மற்றும் காணொளிகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக்கொள்கின்றது.

அத்துடன் வங்கி தொடர்பான  அதன் பெறுமானங்கள் மற்றும் சாதனைகளை அறியும் பொருட்டு உண்மையான மூலாதாரங்களை மாத்திரம் நாடுமாறு அமானா வங்கி கேட்டுக்கொள்கின்றது.

அவ்வாறான உண்மை மூலாதாரங்களாக வங்கியின் இணையத்தளம், வங்கியின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கம் (பேஸ்புக்), கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற வகையில் பரிவர்த்தனையில் உள்ள எமது வெளியீடுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடகங்களில் வங்கியின் வெளியீடுகள் ஆகியன அடங்கும்  என அமானா வங்கி குறிப்பிட்டது.