தனிமைப்படுத்தலுக்காக மக்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; ஒருவர் பலி, 29 பேர் காயம்

தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற கடற்படை பஸ் இன்று (15) புதன்கிழமை பி.ப 4.50 மணிக்கு வரக்காபொலவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மரக்கறி ஏற்றி வந்த லொறியொன்றுடன் மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த லொறி சாரதியின் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.