தனது தோல்விக்கு காரணம் தலைவரும், உதுமாலெப்பையுமே காரணம்: நசீர்

தனது தோல்விக்கு காரணம் தலைவரும், உதுமாலெப்பையுமே காரணம்: நசீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகிய இருவருமே தனது தோல்விக்கு காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம். நசீர் இன்று (07) வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான இவர், இந்த முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டார். எனினும் இந்த தேர்தலில் இவர் தோல்வியடைந்தார்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.