தேர்தலை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ரத்ன தேரர் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையினை கருத்திற்கு கொண்டு ஆறு மாதங்களுக்கு பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தேசிய சபையொன்றை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதுரலிய ரத்ன தேரர் மேற்கண்டவாறு கூறினார்.