சாய்ந்தமருது மக்களை அரசியல் ரீதியாக அநாதைகளாக்க முயற்சிப்பவர் ஹரீஸ்:ஜெமீல்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

சாய்ந்தமருது  மக்களை அரசியல் ரீதியாக அநாதைகளாக்க முயற்சிப்பவர் திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ஏ.எம். ஜெமீல் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஈடுபட்டார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரான எச்.எம்.எம். ஹரீஸ், நேற்று (14)  இடம்பெற்ற ஊடகவிலாளர் மகாநாட்டில் தெரிவித்தாார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில்  கலாநிதி ஏ.எம்.ஜெமீலை தொடர்புகொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.