இப்தார் நிகழ்வுகளிற்கு செலவளிக்கப்படும் பணத்தை காஸா மக்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானம்

இப்தார் நிகழ்வுகளிற்கு செலவளிக்கப்படும் பணத்தை காஸா மக்களுக்கு அனுப்ப அரசாங்கம் தீர்மானம்

றிப்தி அலி

புனித ரமழான் காலப் பகுதியில் அரச நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்விற்காக செலவளிக்கப்படும் பணத்தினை காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, காஸா எல்லைப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஊhடைனசநn ழக புயணய குரனெ இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை (26) அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரிதிநிதியூடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தங்களின் நன்கொடைகளை எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை வங்கியின் (வங்கி இலக்கம்: 7010), தப்ரோபன் (கிளை இலக்கம்: 747) கிளையிலுள்ள 7040016 எனும் கணக்கு இலக்கத்திற்கு 'ஜனாதிபதியின் செயலாளர்' என்ற பெயரில் வைப்பிலிடுமாறும்,  அதற்கான பற்றுச்சீட்டை 0779730396 எனும் இலக்கத்திற்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, கார்கில்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பேஜ், "Children of Gaza Fund" நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாவிற்கான அன்பளிப்பு தொகையை  நிதியமைச்சில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.