'மஹிந்த ராஜபக்ஷவின் உதவியினை பலஸ்தீன் ஒருபோதும் மறக்காது'

 'மஹிந்த ராஜபக்ஷவின் உதவியினை பலஸ்தீன் ஒருபோதும் மறக்காது'

பலஸ்தீனத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பலமான ஒத்துழைப்பினை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம் என இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். டார் செய்த் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எந்தவித பிரச்சினைகளுமற்ற நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதற்கு பலஸ்தீன தூதுவர் இதன்போது பாராட்டு தெரிவித்தார். இதனை அனைத்து பலஸ்தீனர்களும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் விசேட செய்தியினையும் தூதுவர் இதன்போது பிரதமரிடம் கையளித்தார்.