காணிகளுக்கு சட்ட ரீதியான ஆவணங்கள் வழங்குவது தொடர்பான வர்த்தமானி ரத்து

காணிகளுக்கு சட்ட ரீதியான ஆவணங்கள் வழங்குவது தொடர்பான வர்த்தமானி ரத்து

ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பாக காணி ஆணையாளர் நாயகத்தினால் 2020/09/10ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (2020/09/22) காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.