பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக முன்னாள் பிரதம நீதியரசர் நியமனம்

பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான  ஆலோசகராக முன்னாள் பிரதம நீதியரசர் நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட இவர், நாட்டின் 44ஆவது பிரதம நீதியரசராக 2015ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி முதல் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி வரை செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சட்டத்தரணி கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதனும், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.