பாணந்துரை ஹொரேத்துடுவயில் தீ; நான்கு வீடுகள் சேதம்

பாணந்துரை, ஹொரேத்துடுவ பிரதேசத்தில் இன்று (07) வியாழக்கிழமை இரவு  சில வீடுகளில் தீப்பிடித்துள்ளதாக பாணந்துரை வடக்கு பொலிசார்  தெரிவித்தனர்.

இதனால் சுமார் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  தீயை அணைக்க மொரட்டுவை நகர சபையின் தீயணைப்பு படை அழைக்கப்பட்டுள்ளது.

மண் எண்ணெய் விளக்கினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துரை வடக்கு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.