மேலும் 13 கொவிட் - 19 நோயாளிகள் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி

கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் என இன்று (22) புதன்கிழமை அடையாளம் காணப்பட்ட 13 பேர் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் புணானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அடையாளம் காணப்பட்ட பேருவளை பிரதேசத்தினைச் சேர்ந்த 11 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் இன்று மாலை 5.00 மணியளவில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளான 43 பேர் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டன.