கொரோனா வைரஸினால் கிழக்கில் முதல் மரணம்

கொரோனா வைரஸினால் கிழக்கில் முதல்  மரணம்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட நபர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

குறித்த தொற்றாளரை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு IDH வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.