அடுத்த 3 மாதங்களுக்கு 17 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும்

அடுத்த 3 மாதங்களுக்கு 17 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும்

ஜுலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் சைனோஃபாம்இ சைனோவெக்இ ஸ்பூட்னிக் உள்ளிட்ட 17 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்தத் தடுப்பூசிகளை நாடளாவிய ரீதியில் அதிகளவானோருக்குக் குறுகிய காலப்பகுதியில் வழங்க துரித நிகழ்ச்சித்திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொவிட் ஒழிப்பு விசேட குழு இன்று (25) வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதேஇ இது பற்றித் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் கொள்முதல் நடைமுறைகளில்இ இலங்கை பின்பற்றும் முறைமை குறித்துஇ உலக வங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை மற்றும் முறைமை காரணமாகஇ தெற்காசிய நாடுகளில் உள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போதுஇ அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை முன்னிலையில் உள்ள நிறுவனமாக உலக வங்கி அடையாளப்படுத்தியுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக வழங்கப்படும் அங்கீகாரமாகஇ தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் போதுஇ உலக வங்கியின் இணையத்தளத்தின் ஊடாகக் கொடுப்பனவுகளைச் செய்வதற்கான வாய்ப்புஇ இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகஇ பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கையைஇ தெரிவு செய்யப்பட்ட வைத்திசாலைகளின் ஊடாக மேற்கொள்வதற்கான முன்மொழிவொன்றைஇ இன்று பிற்பகல் சுகாதாரச் சேவைகள்
பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்க உள்ளதாகஇ அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

இதன் மூலம்இ நாளொன்றின் பெரும்பகுதி நேரத்தை தடுப்பூசி பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும்இ அதற்கு மருத்துவர்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்இ வைத்தியர் பாதெனிய குறிப்பிட்டார்.

அமைச்சர்களான காமினி லொக்குகேஇ பந்துல குணவர்தனஇ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோஇ கெஹெலிய ரம்புக்வெல்லஇ மஹிந்தானந்த அழுத்கமகேஇ பிரசன்ன ரணதுங்கஇ ரோஹித்த
அபேகுணவர்தனஇ ரமேஷ் பத்திரனஇ நாமல் ராஜபக்ஷஇ இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேஇ சன்ன ஜயசுமனஇ பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகேஇ
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கஇ சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க ஆகியோரும்
முப்படைகளின் தளபதிகள்இ பொலிஸ் மா அதிபர்இ பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.