எதிர்க் கட்சித் தலைவர் ஆறு அம்சங்களுடன் விஷேட கோரிக்கை

எதிர்க் கட்சித் தலைவர் ஆறு அம்சங்களுடன் விஷேட கோரிக்கை

எரிபொருள் விலை குறைப்பு,  விவசாயிகளுக்கு உரங்களை வழங்கல் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கையினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) வெள்ளிக்கிழமை அரசாங்கத்திடம் முன்வைத்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜகபக்ஷ இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்கவும், தன்னிச்சையாக முடிவு எடுக்கபட்ட உரங்கள் மீதான தடையை வாபஸ் பெறவும் அவர் முதலில் தயங்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைகத்தில் வைத்து தெரிவித்தார்.

அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிராக தனது கட்சி மக்களுடன் போராடியது என்றும் அது தொடர்ச்சியான ஓர் போராட்டம் என்றும் அவர் கூறினார்.

இன்றைய விஷேட உரையில் அவர் வெளியிட்ட ஆறு அம்சக் கோரிக்கை பின்வருமாறு;