'மருத்துவ அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது 61' எனும் வர்த்தமானி வெளியீடு

'மருத்துவ அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது 61' எனும் வர்த்தமானி வெளியீடு

அரச சேவையிலுள்ள மருத்துவ அதிகாரிகளின் கட்டாய ஓய்வுபெறும் வயது அறுபத்தொரு (61) ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பணடார தென்னகோனினால் கடந்த யூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஓய்வூதிதிய பிரமாணக் குறிப்பில் செய்யப்பட்ட திருத்தம் 2020.05.20ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச சேவையிலுள்ள மருத்துவ அதிகாரிகளின் வயதெல்லையினை அதிகாரிக்குமாறு அரச வைத்திய அதிகரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதினை அடுத்தே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.