வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவராக சஹீட் எம்.ரிஸ்மி தெரிவு

வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவராக சஹீட் எம்.ரிஸ்மி தெரிவு

றியாஸ் இஸ்மாயில்

 

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 70ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்  கொழும்பு -7 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இன்று (18) சனிக்கிழமை நடைபெற்றது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின்  தேசியத் தலைவர் எம்.எம்.அப்துல் வஹாப் சுகயீனமுற்ற நிலையில்  பதில் தலைவரான உப தலைவர் சஹீத் எம். ரிஸ்மி   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் தொழிலதிபர் மெக்கி  ஹஷீம் விசேட அதிதியாக கலந்துகொண்டதுடன் புத்திஜீவிகள், பேரவையின்  முன்னாள் தேசியத் தலைவர்கள்   செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடு பூராகவும் இருந்து தெரிவு  செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட  வை.எம்.எம்.ஏ. கிளைகளின்   பிரதிநிதிகள்,  மாவட்ட பணிப்பாளர்கள்  எனப் பலர் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின்  2020 -  2021 ஆம் வருடங்களுக்கான நிருவாகத் தெரிவு, பெப்ரல் உப தலைவர் உள்ளடங்கிய  மூவர் கொண்ட தேர்தல் குழு தலைமையில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு இடம் பெற்றதுடன் போட்டியின்றி தேசியத் தலைவராக சஹீத் எம். ரிஸ்மி தெரிவாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய பதவிகளுக்கான தேர்தலில் தேசிய பொதுச் செயலாளராக சட்டத்தரனி சாபிர் சவாத் தேசிய பொதுப் பொருளாளராக பதுளை வை.எம்.எம்.ஏ தலைவர் இஹ்சான் ஹமீத்வும்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பேரவையினால் வழமை போன்று  நடத்தப்படும் வருடாந்த மாநாடும், மத்திய குழுக் கூட்டமும் இம்முறை நடைபெறவில்லை. அத்துடன் வருடாந்த விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த வை.எம்.எம்.ஏ கிளையாக பதுளை கிளை தெரிவு செய்யப்பட்டது.