மஜ்மா கிராமத்தில் இன்று மாத்திரம் 9 கொவிட் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

மஜ்மா கிராமத்தில் இன்று மாத்திரம் 9 கொவிட் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு 08.30 மணி வரை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா கிராமத்தில் ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபாரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் கொரோனாவினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் அட்டாளைச்சேனை ஒருவர், காத்தான்குடி ஒருவர், அக்கறைப்பற்று ஒருவர்,  சாய்ந்தமருது இருவர், சம்மாந்துறை ஒருவர்  கோட்டமுனை ஒருவர், ஏறாவூர் இருவருமாக மொத்தம் ஒன்பது ஜனாஸாக்கள் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.