றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு CIDக்கு அறிவுறுத்தல்

றிசாத் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து  வர நடவடிக்கை எடுக்குமாறு CIDக்கு அறிவுறுத்தல்

தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டுவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன், கோரிக்கைவிடுத்தால் அவரை பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் ஆலோசனைக்கு அமைய இது அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 04ஆம், 05ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் – 19 தொற்றுநோய் சூழல் காரணமாக சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருமாறும் நரேந்திர பெர்னாந்து அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.