மூதூர் தொகுதி SLFP அமைப்பாளராக கிண்ணியா பாயிஸ் நியமனம்

மூதூர் தொகுதி SLFP அமைப்பாளராக    கிண்ணியா பாயிஸ் நியமனம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் SLFP அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை   SLFP   தலைவர் முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கொழும்பில் நடைபெற்ற   SLFP மாநாட்டின்போது வழங்கி வைத்துள்ளார்.

இதன்படி மூதூர் தொகுதியின் அமைப்பாளராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி கிண்ணியா  எச்.எம்.எம். பாயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய காங்கிரஸின் ஊடாக அரசியல் நுழைந்த பாயிஸ், பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார். அக்கட்சியிலிருந்து அதிருப்தி அடைந்த நிலையிலேயே அவர் SLFP இணைந்துள்ளார்.

திருகோணமலை தொகுதிக்கான அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகரகரவும் சேருவில தொகுதிக்கான அமைப்பாளராக மகேஷ் சத்துரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.கே.ஏ.டிஸ். குணவர்தனவின் புதல்வர் நளின் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்