மாஸ்கின்றி wheel barrow இல் பொருட் கொள்வனவு செய்தவர் கைது

மாஸ்கின்றி wheel barrow இல் பொருட் கொள்வனவு செய்தவர் கைது

மாஸ்க் அணியாமல் wheel barrow பொருட் கொள்வனவில் ஈடுபட்ட நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தர்கா நகர் பிரதேசத்தினைச் சேர்ந்த 40 வயதான குறித்த நபர் இன்று (25) செவ்வாய்க்கிழமை மாலை அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் காலப் பகுதியில் பொருட் கொள்வனவிற்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வீட்டிலுள்ள ஒருவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவார் என அரசாங்கம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட நபர் மாஸ்க் அணியாமல் wheel barrow  பொருட் கொள்வனவில் ஈடுபட்ட வீடியோ இன்று காலை சமூக ஊடகங்களில் வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.