யாழ். இந்திய துணைத் தூதுவராலயத்தில் மகாகவி நினைவு தினம்

யாழ். இந்திய துணைத் தூதுவராலயத்தில் மகாகவி நினைவு தினம்

யாழ்.தர்மினி

இந்தியாவின்  தேசிய கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் 100ஆவது ஆண்டு  நினைவு தினம் இன்று (11) சனிக்கிழமை   காலை யாழ். இந்திய துணைத் தூதுவராலயத்தில் இடம்பெற்றது.

யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தூதுவர் மற்றும் அதிகாரிகள் சகிதம் மலர் மாலையிட்டு  வணக்கம் செலுத்தினார்கள்.

கொவிட் -19 சூழ்நிலை காரணமாக. சுகாதார நடைமுறைகளை கருத்திற் கொண்டு மிக அமைதியாக இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாநகர முதல்வர்  மற்றும் யாழ். மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரு ம்  இணையவழி ஊடாக பங்கு பற்றி பாரதியார் குறித்து சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.