மட்டு. மாவட்ட செயலாளராக கருணாகரன் நியமனம்

மட்டு. மாவட்ட செயலாளராக கருணாகரன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்னர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக இவர் கடமையாறினார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளராக முன்னர் கடமையாற்றிய திருமதி கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.