10,346 பேருக்கு 9 பாடங்களிலும் 'A' தர சித்தி

10,346 பேருக்கு 9 பாடங்களிலும் 'A' தர சித்தி

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற 2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரன தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 10,346 பேருக்கு 9 பாடங்களிலும் 'A' தர சித்தியினை பெற்றுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (27) திங்கட்கிழமை அறிவித்தது.

இந்த பரீட்சை பெறுகள் இன்று பி.ப 2.00 மணியளவில் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய:

பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள்                  : 717, 246 பேர்
பரீட்சைக்கு தோற்றியவர்கள்                           : 556,256 பேர்
9 பாடங்களிலும் 'A'  தர சித்தி                           : 10,346 பேர்
உயர் தரம் கல்வி கற்க தகுதி பெற்றவர்கள்   : 73.84 வீதம்
கணித பாடத்தில் சித்தியடைந்தவர்கள்         : 66.82 வீதம்