போலி முகநூல் இயக்கிய இளைஞருக்கு விளக்கமறியல்

போலி முகநூல் இயக்கிய இளைஞருக்கு விளக்கமறியல்

போலி முகநூல் இயக்கிய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொத்துவில் மீம்ஸ் எனும் பெயரில் முகநூல் பக்கம் இயக்கியவரே நேற்று (03) வெள்ளிக்கிழமை பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர், சட்டத்தரணிகள், பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோரை கேலி செய்து அவர்களின் சுயமரியாதைகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞரை பொத்துவில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

-சம்சுல் ஹுதா-