2 அரச நிறுவனங்களை இழந்தார் சரத் வீரசேகர

2 அரச நிறுவனங்களை இழந்தார் சரத் வீரசேகர

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கீழ் செயற்பட்டு வந்த இரண்டு நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜுலை 29ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பல்நோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களம் ஆகிய இரண்டுமே ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது, இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய பொலிஸ் கல்வியகம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கீழ் காணப்படுகின்றன.