இந்திய உயர் ஸ்தானிகர் - சீ.வி சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர் - சீ.வி சந்திப்பு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இந்திய உயர் ஸ்தானிகர் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (23) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்திய -  இலங்கை உறவு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் வட மாகாணம் உட்பட இலங்கையின் முன்னேற்றம் மற்றும்  அபிவிருத்தி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகர் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் வட மாகாண முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.