3 வருடங்களின் பின்னர் சிகரெட்டின் விலை அதிகரிப்பு

3 வருடங்களின் பின்னர் சிகரெட்டின் விலை அதிகரிப்பு

சிகரெட் ஒன்றின் விலை ஐந்த ரூபாவினால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்கும் போதே இந்த அறிவிப்பினை அவர் மேற்கொண்டார்.

கடந்த மூன்று வருடங்களாக சிகரெடின் விலை அதிகரிக்கப்படாத நிலையிலேயே தற்போது அதிகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று மாலை வெளியிடப்படும் என அவர் மேலும் கூறினார்.