7 தமிழ் அமைப்புக்கள், 300ற்கும் அதிகமானோர் இலங்கை அரசினால் கறுப்பு பட்டியலில் சேர்ப்பு

7 தமிழ் அமைப்புக்கள், 300ற்கும் அதிகமானோர் இலங்கை அரசினால் கறுப்பு பட்டியலில் சேர்ப்பு

வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், முஸ்லிம் மற்றும் தமிழ் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த 300ற்கும் அதிகமான தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்ந்துள்ளது.

பெப்ரவரி மாதம் 25ம் திகதியிடப்பட்ட இந்த  வர்த்தமானி அறிவிப்பு, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னணியிலேயே, இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்களே மீண்டும் தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலான தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்து பார்க்கவும்