IEAS Campus இன் உத்தியோகபூர்வ திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

IEAS Campus இன் உத்தியோகபூர்வ திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

IEAS Campus யின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்.
கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள Institute of Engineering & Allied Sciences உயர் கல்வி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவும் 2019ம் கல்வியாண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுள் ஒரு தொகுதி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 28.02.2021 அன்று வெகு சிறப்பாக கல்முனை IEAS Campus யில் நடைபெற்றது.

IEAS உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் Dr. M. Ilyas அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் தற்போதைய தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியுமான Dr. K. Premakumar அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கௌரவ அதிதிகளாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி Sujith Priyantha அவர்களும் IEAS உயர்கல்வி நிறுவனத்தின் ஆலோசகரும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான Dr. M.M.M. Mahusoon அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் 110 மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி Rifka Safeen அவர்கள் 'LIFE at UNIVERSITY' என்ற தலைப்பில் விசேட உரையாற்றியிருந்தார்.