உலக முஸ்லிம் லீகினால் பொலிஸாருக்கு 1,250 உலருணவுப் பொதிகள் அன்பளிப்பு

உலக முஸ்லிம் லீகினால் பொலிஸாருக்கு 1,250 உலருணவுப் பொதிகள் அன்பளிப்பு

அஷ்ரப் ஏ. சமத்

உலக முஸ்லிம் லீகினால் பொலிஸ் திணைக்களத்திற்கு 1,250 உலருணவுப் பொதிகள் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டன. ஐயாயிரம் ரூபா பெறுமதியான இந்த பொதிகள் மேல் மாகாணத்திலுள்ள 25 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாருக்கு பகிர்;ந்தளிக்கப்பட்டன.

பிரபல வர்த்தகரான முஸ்லிம் சலாஹுதீனின் ஊடாக உலக முஸ்லிம் லீகினால் இந்த பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அண்மையில் பம்பலப்பிட்டியில் பொலிஸ் பீல்ட் போர்ஸில் இடம்பெற்றது.

இதன்போது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னக்கோனிடம் வர்த்தகர் முஸ்லிம் சலாஹுதீனினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.