முன்னால் பிரதி அமைச்சர் மஹ்ரூப் கைது

முன்னால் பிரதி அமைச்சர் மஹ்ரூப் கைது

அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தேசிய அமைப்பாளரும், பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப், இன்று (15) செவ்வாய்க்கிழமை அதிகாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வருகை வந்த விசேட குழுவினரால் கிண்ணியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இவர், தற்போது கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சதொச நிறுவனத்தின் வாகனமொன்றினை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.