ஹைட்பார்க் மைதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வருட பூர்த்தி விழா

ஹைட்பார்க் மைதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வருட பூர்த்தி விழா

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வருட பூர்த்தி விழா எதிர்வரும் திங்கட்கிழமை (15) பி.ப 02.30 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் சுகாதார வழி முறைகளின் பிரகாரம் இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் சகல பதவி நிலை அங்கத்தவர்கள், சர்வ மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சியின் மகளிர் சக்தியின் பிரதிநிதிகள், இளைஞர் சக்தியின் பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் உட்பட ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 20 அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சுகாதார பிரிவினர்களின் வழிகாட்டல்கள் மற்றும் வேண்டுகோள்களின் அடிப்படையில் கொவிட் சட்ட திட்டங்களின் பிரகாரம் வரையறைகளுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.