நசீர் அஹமட், பச்சோந்தித்தனமாக செயற்படுகின்றார்: ஹக்கீம்

நசீர் அஹமட், பச்சோந்தித்தனமாக செயற்படுகின்றார்: ஹக்கீம்

எம்.என்.எம்.அப்ராஸ்

அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பச்சோந்தித்தனமாக செயற்படுகின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினாலேயே அவர், கிழக்கு மாகாண முதலமைச்சராகவும், மாகாண அமைச்சராகவும் செயற்பட்டார் எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

"இப்பதவிகளின் ஊடாக பல வரப்பிரசாதங்களை நசீர் அஹமட் அனுபவித்துவிட்டு இன்று 13ஆவது திருத்தச் சட்டத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நன்மை எனக் கேள்வி எழுப்புகின்றார்.

இக்கேள்வியினை அவர் முன்னர் எழுப்பி இருப்பாரேயானால் குறித்த பதவிகளை அவருக்கு ஒருபோதும் வழங்கியிருக்கமாட்டேன என அவர் மேலும் கூறினார்.

கல்முனையில் இன்று (17) சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.