UNP பிளவுபட ரவூப் ஹக்கீமே காரணம்: ருவன் விஜேவர்தன

UNP பிளவுபட ரவூப் ஹக்கீமே காரணம்: ருவன் விஜேவர்தன

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ரவூப் ஹக்கீம் ஒவ்வொரு விடயத்தையும் கூறி சஜித் பிரேமதாசவை பிளவுப்படுத்தியதுடன், பின்னரான காலத்தில் ஹக்கீமின் கட்சியைச் சேர்ந்தவர்களே 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் எனவும் அவர் கூறினார்.

எமது கட்சியை பிளவுபடுவதற்கு டயானா கமகேவும் காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.