தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ இராஜினாமா செய்துள்ளதாக ஊடக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டு வந்த இவர், இலங்கை சிவில் நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.

அரசாங்க தகவல் திணைக்களத்திற்கும் ஊடகவியலாளர்களும் இடையில் சிறந்த உறவினை கட்டியொழுப்பும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை இவர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.