கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஹஸன் நியமனம்

கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஹஸன் நியமனம்

அப்துல் கபூர்

நிந்தவூரைச் சேர்ந்த P.T.A. ஹஸன், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகமொன்றின் பதிவாளராகவும் பணியாற்றுகின்ற இவர், கிழக்கு மற்றும் தென் கிழக்கு பலகலைக்கழகங்களின் முன்னாள் பேரவை உறுப்பினராகவும் சேவையாற்றியதன் விளைவாக பல்கலைக்கழக முகாமைத்துவத்தில் அனுபவமுள்ள ஒரு சிறந்த நிர்வாகி என்பதோடு பல தனியார் வர்த்தக நிறுவனங்களினது வர்த்தக அபிவிருத்தி ஆலோசகராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ் ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் பட்டப்பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுமானிப் பட்டத்தினை கொண்டுள்ள இவர் வொல்வர்கம்ரன் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப் பட்டத்தினையும், அவுஸ்திரேலியாவின் பொது கணக்காளர் நிறுவனம் மற்றும் இலங்கை மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் உறுப்பினராக பணியாற்றுவதும் விசேட அம்சமாகும்.