குற்றம் செய்திருந்தால் மரண தண்டனை வழங்கவும்: றிசாத்

எதாவது குற்றம் செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை வழங்குங்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் இன்று (18) செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.

பழிவாங்கும் நோக்கில் என்னை குற்றப் புலனாய்வு பிரிவின் நான்காம் மாடியில் தடுத்துவைக்காமல் நீதிமன்றில் ஆஜர்படுத்துங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நாட்டிலும் இல்லாத பயங்கரவாத தடைச் சட்டம் எனும் காட்டுச் சட்டத்தின் ஊடாக நான் பழிவாங்ப்படுகின்றேன் என முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டார்.

இதன்போதே உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.