ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியமையால் அண்மையில் தமது உள்ளூராட்சி மன்ற உறுப்புரிமையை இழந்த 69 பேர் அக்கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் இதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (27) எதுல் கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவர்கள் மூலம் ஒவ்வொரு வாக்காளர் பிரிவுகளையும் இலக்காகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னொடுக்க உத்தோசிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த உறுப்பினர்கள் அனைவரையும் பாதுகாப்பேன் என்றும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க தயங்கமாட்டேன் என்றும், தலைவராக சகல தேர்தல் வாக்காளர்கள் பிரிவுகளுக்கும் சமூகமளித்து இவர்களை சக்திப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நிகழ்வில் உறுதியளித்தார்.