எம்.கே சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிடியாணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
யாழ். வெல்வெட்டித்துறையிலுள்ள வீட்டில் இருந்தபோது அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)