கொழும்பில் கலைஞர் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்வு

கொழும்பில் கலைஞர் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்வு

மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவாஞ்சலி எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு – 12, ஆமர் வீதியிலுள்ள பிரைட்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சிறப்புரையாற்றவுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்  வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள  இக்கூட்டத்தில் தொடக்கவுரையை கலைஞர் கலைச்செல்வனும், ஆசியுரையை பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா ராமச்சந்திர குருக்களும் நிகழ்த்தவுள்ளனர்.  

அரசியல் பிரமுகர்கள், கலை இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இதில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இலங்கை - இந்திய பத்திரிகை தொடர்பாளர் மணவை அசோகனின் வழிகாட்டலில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவாலயத்தின் ஏற்பாட்டில இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.