மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் ஜெமீல்

மக்கள் காங்கிரஸிலிருந்து  வெளியேறினார் ஜெமீல்

அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து 
வெளியேறியதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ஏ.எம்.ஜெமீல் இன்று (26) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதற்கமைய கட்சியின் பிரதித் தலைவர் பதவி, உறுப்புரிமை ஆகியவற்றிலிருந்தும் இராஜினாமாச் செய்ததாக அவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தனது அரசியல் பயணத்தினை எந்தக் கட்சியில் மேற்கொள்வது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.