பிரதமர் - தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சந்திப்பு

பிரதமர் - தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹுல் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.