நாவற்குடா வாகன விபத்தில் இருவர் பலி

நாவற்குடா வாகன விபத்தில் இருவர் பலி

மட்டக்களப்பு, நாவற்குடா பிரதேசத்தில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரதேசத்திற்கு கோழி ஏற்றி பந்த சிறிய ரக பட்டா லொரி, கனரக ஆள டித்தான் லொறியுடன் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, ஏறாவூரைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான மேலதிகாக விசாரணை மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.ஜெலீஸ்-