நாளையும் பாராளுமன்றம் கூடும்

நாளையும் பாராளுமன்றம் கூடும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த ஜனவரி 18ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த பின்னர் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடன உரை தொடர்பில் ஜனவரி 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளைய தினமும் (21) தொடர்ந்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் இணக்கப்பாட்டுக்கு அமைய
நாளை (21) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 வரை சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அன்றையதினம் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மதியபோசன இடைவேளைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.