கொவிட்-19 காரணமாக கல்முனை காணிப் பதிவகம் மூடல்

கொவிட்-19 காரணமாக கல்முனை காணிப் பதிவகம் மூடல்

கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கல்முனை காணிப் பதிவகமும், மாவட்ட பதிவகமும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (28) புதன்கிழமை முதல் எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை இந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அலுவலகத்தில் கடமையாற்றிய அனைத்து ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.