வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சண்முகா வித்தியாலய ஆசிரியை பார்வையிட்ட எம்.பி

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சண்முகா வித்தியாலய ஆசிரியை பார்வையிட்ட எம்.பி

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்க நேற்று (02) சென்ற ஆசிரியையான பஹ்மிதா தாக்குதலுக்குள்ளான நிலையில் தற்பொழுது திகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நேரடியாக சந்தித்துள்ளார். இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டதடவடிக்கை எடுப்பதற்குறிய முன்னெடுப்புக்களையும் அவர் தற்போது முன்னெடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும் பஅவருடைய அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று (03) சந்தித்து உரையாடியுள்ளார்.