நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் காரியாலயம் திறப்பு

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் காரியாலயம் திறப்பு

வாகரை பிரதேச மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் வாகரை நீதி நிர்வாக பிரிவுக்கான அலுவலகம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) திறந்துவைக்கப்பட்டது.

திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி ரிஸ்வானி ரிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண சுகாதார சுதேச வைத்திய, சமூக சேவைகள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் கிராமிய மின்மயமாக்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன்  பிரதம அதிதியாகவும், அதிதிகளாக வாகரை பிரதேச செயலாளர்  ஜீ.அருனன், திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சரண்யா சுதர்ஸன்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.எம்.எச்.நயீமுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் திணைக்களத்தின் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.