ஊரடங்கு சட்டம் நீக்கம்

ஊரடங்கு சட்டம் நீக்கம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் அமுலில் இருந்து ஊரடங்கு சட்டம் இன்று ஞாயிறுக்கிழமை (28) முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தது.

கொரோனா வைரசை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 13ஆம் திகதி முதல் தினந்தோறும் இரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஊரடங்கு சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.